சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் கல்வி ஆலோசகர் நல்லாசிரியர் கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அவர் தனது சுதந்திர தினச் சிறப்புரையில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்தார். அவர்களை என்றென்றும் போற்ற வேண்டியது அனைவரின் கடமை என்று கூறினார். மேலும் அவர் தேசிய கொடியை பற்றியும் அது உருவான வரலாற்றையும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில், பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி, ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டர். விழாவிற்கான ஏற்பாடுகளைப் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.