ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதில் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி எனக் களைகட்டிய இவ்விழாவில் வெவ்வேறு துறைகளில் தங்களது திறமைகளால் பல சாதனைகளைப் படைத்த முன்னாள் மாணவியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. செய்திமடல் வெளியீடு, கல்லூரியில் இளநிலைப்பட்டம் பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் எனத் தொடர்ந்த இந்த நிகழ்ச்சியானது முன்னாள் மாணவிகள் மலரும் நினைவுகளோடு, தற்போதும் கல்லூரியோடு தொடர்பு கொண்டிருப்பதைப் பறைசாற்றியது.

கல்லூரி முதல்வர் சித்ரா மாணவிகளின் இரண்டாம் தாய்வீடாக இருக்கும் கல்லூரியோடு எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என கூறித் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.