தூய்மைப்பணியாளர்களின் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சாய்பாபா காலனி, இராமசாமி வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுவந்ததை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை , மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் .