எஸ்.என்.ஆர். கல்லூரியை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் இணைப்பு விழா புதன்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் S. ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் பால்ராஜ் வரவேற்புரை வழங்கினார். தலைமையுரை வழங்கிய லஷ்மிநாராயணசுவாமி நமது கல்லூரியைத் தேர்வு செய்த மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை வாழ்த்தி வரவேற்றார். மேலும் கல்லூரியில் உள்ள நவீன உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்வில் மிக உயரிய நிலையை மாணவர்கள் அடைய வேண்டும் என்று பேசினார்.

சிறப்புரையாற்றிய S. ராஜா இலக்குகளை நோக்கிச் சரியாக நேரத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் நிர்வாக அறங்காவலர் கூறிய கருத்துக்களை மாணவ மாணவியர்கள் தங்கள் வாழ்வில் சரியான முறையில் கடைப்பிடித்து முன்னேற வேண்டும் என்றும் சிறப்பு விருந்தினர் பேசினார். மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை தலைவர் ஹேமா நன்றியுரை ஆற்றினார்.