மீன் வாங்கினால் கால் கிலோ தக்காளி இலவசம்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கும் வாடிக்கையாளரை கவர்வதற்காக மீன் வியாபாரி, மீன் வாங்கினால் கால் கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு விற்பனை செய்து வருகிறார் இது எல்லோரையும் கவர்ந்துள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வருபவர் ஜாபர். இவர் தனது கடைக்கு மீன் வாங்க வருபவர்களுக்கு கால்கிலோ தக்காளி இலவசமாக வழங்கி வருகின்றார்.தக்காளி விலை உயர்வு காரணமாக மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும்,

இதனால் வாடிக்கையாளர்களை கவர இன்றும், நாளையும் என இரு தினங்கள் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளி இலவசமாக கொடுப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்தார். மீன் வாங்கியதற்காக , தக்காளி விற்கும் விலைவாசிக்கு கால் கிலோ தக்காளி இலவசமாக கொடுத்ததால் கூடுதலாக மீன் வாங்கி செல்வது குறிப்பிட தக்கது.