மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் விஜயலட்சுமி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.