இந்துஸ்தான் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை மற்றும் தி மெட்ராஸ் டைரிஸ் நெதர்லாண்ட்ஸ் நிறுவனமிடையே செவ்வாய்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இத்துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு வெளிநாட்டில் குறிப்பாக நெதர்லாந்து போன்ற இடங்களில் விருந்தோம்பல் துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றிய தகவல்களையும், நெறிமுறைகளையும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது

இதில் நெதர்லாந்து தி மெட்ராஸ் டையரிஸின் நிறுவனர் காயத்ரி செந்தாமரைக்கண்ணன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் பிரியா , இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் துறைத் தலைவர் பிரேம்கண்ணா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.