பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் பீகார் மாநில அரசு குழு ஆகியோர் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஊதியம், தங்குமிடம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

கோவையில் தனியார் நிறுவனங்களில், பீகார் மாநில அரசு குழு ஆய்வு தொடர்பாக செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.