கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வேண்டும் – குழந்தைகளுடன் பெற்றோர் மனு

கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

கோவை கணபதி மாநகரை சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை கணபதி மாநகரில் தனியார் மழலைகள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர் டி ஐ மூலம் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர்.

இதனிடைய கடந்த ஆண்டு இந்த தனியார் பள்ளி திடீரென மூடப்பட்டது. இதனால் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் ஆர்.டி ஐ மூலம் மீண்டும் படிக்க வைக்க அரசு உதவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.