ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புதிய கண்டுபிடிப்புக்கான கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான கண்காட்சி நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கோவை கேப்ஜெமினி சொல்யுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் நிபுணர் சிவகார்த்திகேயன், குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் சொல்யுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் நிபுணர் சுஸ்மிதா ராஜேந்திரன் மற்றும் கோவை ராபர்ட் பாஷின் மூத்த மென்பொருள் பொறியாளர் கைலாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளின் சார்பில் சுமார் 400 பேர் 102 குழுக்களாக பங்கு பெற்று தங்களின் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர் .

சிறந்த வடிவமைப்பு, சிறந்த கண்டுபிடிப்பு, உயர் சமூக தாக்கம், ஸ்டார்ட் அப் ஸ்கோப் மற்றும் சிறந்த குழு விளக்கக்காட்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக வடிவமைத்த முதல் மூன்று குழுக்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்து பாராட்டு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கினர்.