கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் குனியமுத்துார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.17) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை (பிப்ரவரி 17) 9:00 முதல் 4:00 மணி வரை கீழ் குறிப்படபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

க.க.சாவடி துணை மின் நிலையம்

முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.,பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்க சமுத்திரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.