கதிர் கல்லூரியில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மன்றம் (Health and wellness club) மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் “வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான” மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வை கோவை மண்டலத்தின் கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கதிர் கல்வி குழுமத்தின் தாளாளர் கதிர், மேனாள் நீலாம்பூர் ஊராட்சிமன்ற தலைவர் சண்முகசுந்தரம், கோவை சரகத்தின் உதவி இயக்குநர் இளங்கோ, கல்லூரி முதல்வர் கற்பகம், கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழு, பேராசிரியர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.