ஈஷாவிற்கு எதிராக பொய் பிரச்சாரம்: கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்து ஆலாந்துறை சுற்றுவட்டார கிராம மக்கள் திங்கள் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுபள்ளம், மத்வராயபுரம், முட்டத்துவயல், முள்ளாங்காடு, தாணிக்கண்டி, மடக்காடு, நல்லூர்வயல்பதி, பட்டியார்கோயில்பதி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பழங்குடி மக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஈஷாவால் தங்களுடைய கிராமங்கள் அடையும் பயன்களை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்வதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.