அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப், யூத் ரெட் கிராஸ் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது.
இதனை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் மற்றும் பதிவாளர் கௌசல்யா தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்த தானம் அளித்தனர்.