என்.ஜி.பி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி பிரிவு சார்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கு “பொறியியலுக்குப் பிறகு தொழில் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பிரபா பாராட்டிப் பேசினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் உதவிப் பேராசிரியர் செந்தில்நாதன் வரவேற்றார்.

கோழிக்கோடு ஈஸிலிங்க் அகாடமியின் நிர்வாக இயக்குனர் சோனி அக்காரா, மாணவர்களுக்கு அவர்களின் தொழில் வாய்ப்புகள் குறித்து தெரியப்படுத்தியதுடன், அவர்களின் படிப்புத் திட்டத்தில் அவர்களின் சொந்த பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிய உள்ளீடுகளை வழங்கினார்.