இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராக ரத்தீஸ்குமார் நியமனம்

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராக கோவையை சேர்ந்த ரத்தீஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஷ் மற்றும் அகில இந்திய பொறுப்பாளர் கிருஷ்ணா, இளைஞர் கொள்கை மற்றும் ஆராய்ச்சி துறை தலைவர் விகாஷ் யாதவ் ஆகியோரின் பரிந்துறையில் கோவையை சேர்ந்த ரத்தீஸ்குமார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்தீஸ்குமார், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பி.வி.ஸ்ரீனிவாஷ், கிருஷ்ணா, விகாஷ் யாதவ் ஆகியோருக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞர் காங்கிரசை சார்ந்த டென்ஸ்டன் ராஜா, ஜோஸ்வா, ஜிபசன் தாமஸ், ராகுல், பீட்டர் ஆகியோர் ரத்தீஸ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இளைஞர்களை ஒருங்கிணைத்து சமுதாய நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக ரத்தீஸ்குமார் உறுதியளித்தார்.