என்.ஜி.பி கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழா

டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் நல்லா ஜி பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்லூரி கலை அரங்கில் மாணவர் சங்க தொடக்க விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் பிரபா வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்று விழாவினை தொடக்கி வைத்தார்.

பின்னர் கல்லூரியின் செயலாளர் டாக்டர் தவமணி பழனிசாமி பாராட்டுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச் குழமத்தின் தொழில் மேம்பாட்டு இயக்குநர் மதுரா பழனிசாமி மற்றும் இயக்குநர் முத்துசாமி பங்கேற்றனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெங்களூருவிலுள்ள இண்டர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் முதன்மை சரிபார்ப்பு பொறியாளராக பணியாற்றும் சரத்குமார் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

அதன் பின்னர் மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு பதவி பிராமாணம் செய்து வைத்தனர். மாணவர் சங்க உறுப்பினர்களின் தலைவராக ஆதித்யவிஷ்ணு, துணைத்தலைவராக சுவேதா, செயலாளராக கோகுலகிருஷ்ணன், இணைசெயலாளராக அருணிகா பதவியேற்று கொண்டனர். உறுப்பினர்களாக டாலிஸ்வேதா, சூர்யதர்ஷினி, சினேகா, விஷால் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

இதனை தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட உறுப்பினர்களை பாராட்டி சிறப்பு விருந்தினர் பேசினார்.