கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோவை இஸ்கான் ஆலயத்தில் சிறப்பு பூஜை

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கோவை இஸ்கான் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணரின் அவதார தினம், கோவை மாநகரில் கொடிசியா வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீஜெகந்நாதர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவையொட்டி வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை கோவை இஸ்கான் அமைப்பினர் செய்திருந்தனர்.

அதிகாலை முதல், நள்ளிரவு வரை சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், தவத்திரு பக்தி வினோத சுவாமி மஹராஜின் சிறப்பு பிரசங்கம், மதுகோபால் தாஸின் பிரசங்கம், அபிசேகம், கோபூஜை, பகவான் ஜெகன்னாதருக்கு தீபராதனை, சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.