இசைஞானி இளையராஜா எம்.பி ஆக பதவியேற்பு

இசைஞானி இளையராஜாவின் அடுத்தக் கட்ட பயணம் இன்று தொடங்கியது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இன்று மாநிலங்களவை எம்.பிஆக பதவி ஏற்றுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள போட்டி வீராங்கனை பி.டி உஷா, தர்மசால கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி களாக கடந்த சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக  மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க இளையராஜா டெல்லி பயணம் மேற்கொண்டார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழில் உறுதி மொழி ஏற்ற இளையராஜா தற்போது எம்.பி.யாக பதவியேற்றார். மேலும், இவருக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும்  வாழ்த்து தெரிவித்தனர்.