பஸ்ஸில் செஸ் வரைந்து விழிப்புணர்வு 

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்குகிறது. அந்த போட்டியை முன்னிட்டு கோவையில் மாநகராட்சி சார்பில் பேருந்தில் செஸ் வரைந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர் ஏற்படுத்தும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். மேலும் அங்கு மாமன்ற உறுப்பினர் சாந்தமணி பச்சைமுத்து, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.