பாரத மாதா அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் மேல் கல்வி குறித்து மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கும் விழா உடையாம்பாளையம் பாரத மாதா திடலில் நடைபெற்றது.

இவ்விழாவில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரி மேல்படிப்பை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு காசோலையாக தலா ரூ. 5000 நிதியுதவி மற்றும் நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், மேல்படிப்பு தொடர்பான கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், ராஜா, கார்த்திக், பிரவீன், பிரகாஷ், சக்திவேல், சுரேஷ், ஷ்யாம், சக்தி, சுபஸ்ரீ மற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.