கோவை வடக்கு பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 2000 பேர் பங்கேற்பு

திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இப்போராட்டத்தை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோவையில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் அன்னூர் பகுதியில் உள்ள வாஜ்பாய் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக 2000 பேர் கலந்நுகொண்டனர்.

பா.ஜ.கவின் தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் இதில் கலந்து கொண்டார்.