கே.பி.ஆர் கல்லூரியில் கொரோனோ தடுப்பூசி முகாம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக கல்லூரி வளாகத்தில் கொரோனோ தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வானது கல்லூரி முதல்வர் செபாலுசாமி தலைமையில் தொடங்கப்பட்டது. இம்முகாமில் கே.பி.ஆர் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் கே.பி.ஆர் குழும ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திப் பயன் பெற்றனர்.

இம்முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என 100 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.