லட்சுமி மெஷின் ஒர்க் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை: மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பாக எல்.எம்.டபிள்யூ (LMW) நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயதுக்கு மேல் 44 வயதுக்குட்பட்ட 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கணியூர் பகுதிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ் குமார் ஆகியோர் தடுப்பூசி முகாமை பார்வையிட்டனர். எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரிகள் உடனிருந்தனர்.