கே.ஜி. மருத்துவமனை சார்பில் ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணி

கே.ஜி. மருத்துவமனை மற்றும் ப்ரிஸ்டின் பியர் மருந்தகம் இணைந்து உலக ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணியை செவ்வாய்கிழமை நடத்தியது. இதில் கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது கே.ஜி. மருத்துவமனையில் துவங்கி அவிநாசி சாலை வழியாக ரேஸ்கோர்ஸ் அடைந்து மீண்டும் மருத்துவமனையில் முடிவடைகிறது.

இதில் கே.ஜி. மருத்துமனையின் மருத்துவர்கள், செவிலியர் துறை மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.