வி.எல்.பி. கல்லூரியில் 100% வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளம் இந்தியர்கள் மற்றும் சமூக விரிவாக்கச் சேவை மையம் இணைந்து 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்வில் கல்லூரி அறங்காவலர் சூரியகுமார் தலைமை ஏற்று வரவேற்பு வழங்கினார். கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் விழிப்புணர்வு உரையை வழங்கினார். பேரூர் தாசில்தார் ஜோதிபாசு மற்றும் வருவாய்த் துறை இன்ஸ்பெக்டர் சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டு ‘வாக்களிப்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்’ என்றும் ‘உங்கள் வாக்கு உங்கள் உரிமை’ என்றும் வலியுறுத்தினார். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

செந்தமிழ் அறக்கட்டளை அறங்காவலர் கனக சுப்பிரமணி, துணை முதல்வர் வாசுதேவன், தமிழ்த் துறைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் விழிப்புணர்வு உரையை வழங்கினர். மேலும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர்.

இதில் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.