தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 43வது பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 43 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

   

நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ் வேந்தன் மற்றும் மேலாண்மைக் குழு, கல்விக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.