நேரு கலை அறிவியல் கல்லூரியில் பேண்டாபிளஸ் – 2024

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளும் கலந்துகொள்ளும் பேண்டாபிளஸ் – 2024 நிகழ்ச்சியானது பி.கே. தாஸ் கலை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்க விழாவிற்கு கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் Adv. Dr. P. கிருஷ்ணதாஸ் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார். நேரு கல்விக் குழுமத்தின் செயலா் Dr. P. கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு கோவை ஹச். டி.எப்.சி. வங்கியின் உதவி மேலாளர் செல்வி பினி, சக்தி ஃபைனான்ஸ் மனிதவள மேம்பாட்டு அதிகாரி செல்வி ஆகியோர் நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அனிருதன் சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுகவுரையினை வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு சூரியன் எப்.எம். வானொலி வர்ணவனையாளர் சுஷ்மா, திருச்சூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் அக்ஷர ரவீந்திரன் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஸ்டீபன் தேவசி மற்றும் பின்னனி பாடகர் நரேஷ் ஐயர் கலந்துகொண்ட இன்னிசை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.