தர்ப்பூசணி விற்பனை களைகட்டத் தொடங்கியது!

கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது.  தற்போது  இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில்,  பொதுமக்கள் பலரும் உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ளத் துவங்கிவிட்டனர். கம்பங்கூழ், நீர்மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்தத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் வெயில் காலத்தில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி விற்பனை கோவையில் துவங்கி உள்ளது. இந்த பழத்தில் நீர்ச் சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்வர்.

கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தர்பூசணி பழச்சாறும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் தர்பூசணி பழங்களையும், பழச்சாற்றையும் விரும்பி உட்கொள்கின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்பதால் இறக்குமதியை அதிகரிக்க வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.