குடியரசு தின அணிவகுப்பில் கே.பி.ஆர். கல்லூரி மாணவி பங்கேற்பு 

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி 4(TN) பிஎன் என்சிசி, இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.COM (CA)  படிக்கும் மாணவி (கேடட்SGT) ராசாத்தி, எதிர்வரும் ஜனவரி 26 குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி அந்தமான் நிக்கோபார் இயக்குநரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புதுடெல்லி கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு செல்கிறார்.

மாணவியின் மாபெரும் சாதனையை கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, முதல்வர் பி.கீதா  மற்றும் தேசிய மாணவர் படையின் அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டி ஊக்கமளித்தனர்.

கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கு முன் என்சிசி தொடங்கப்பட்டதால், “கர்தவ்யா பாதை” நிகழ்வில் தொடர்ந்து அணிவகுப்பில் கலந்து கொண்டு “ஹாட்ரிக்” சாதனை புரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாணவி ராசாத்தி கூறுகையில்,  தம்மைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்குத் தமது நன்றியினைத் தெரிவித்தார்.