“கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே பி ராமசாமி பங்கேற்றார். கல்லூரி முதல்வர் ராமசாமி வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் குடில்களை அழகுற அமைத்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்வில் மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.