சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தெற்கு மண்டலம் வார்டு எண்.76 க்குட்பட்ட செல்வபுரம், சோமு கார்டன் பகுதியில் மாநில நிதி கழக திட்டத்தின்கீழ் ரூ.79 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 13 சாலைகள் பணிகளை விரைவில் செய்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

இதில் துணை மேயர் வெற்றிசெல்வன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.