வீட்டில் மூலிகைகளை தண்ணீரில் வளர்ப்பது சிறந்ததாகும். இருப்பினும், பெரும்பாலான மூலிகைகள் சந்தையிலிருந்து வாங்கினால் விலை அதிகம். அதனால்தான் அவற்றை உங்கள் சொந்த தோட்டத்தில் ஒரு தொட்டியில் தண்ணீருடன் வெயில் தாக்கும் இடத்தில் வளர்ப்பது ஒரு சிறந்த முறையான வளர்ப்பாகும்.
புதினா
புதினா வீட்டில் வளர்ப்பதால் செரிமான பிரச்சனைகளை ஆற்றவும், தலைவலியை போக்கவும், வயிற்று வலிக்கு சிகிச்சையளிக்கவும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம்.
ஆர்கனோ
ஆர்கனோ என்பது எப்போதும் பசுமையாக இருக்கும் மூலிகையாகும். இது பெரும்பாலும் சாஸ்களில் இன்றியமையாத மூலப்பொருளாகக் காணமுடிகிறது. இதனை நன்கு வளரச் செய்வதற்குச் சமீபத்தில் நடப்பட்ட ஆரகனோ செடியின் ஒரு பகுதியை வெட்டி, அதை தண்ணீரில் வைக்க வேண்டும்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி வளர்வதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும், அது வீட்டில் வளர்க்கக்கூடிய நல்ல தாவரமாக அமைகிறது. அப்படி, அதிக நேரம் எடுத்துக்கொள்கையில் சூரிய ஒளியை நிறையப் பெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
பீஸ் லில்லி
பீஸ் லில்லி என்பது அதன் வெள்ளை பூக்களுக்குப் பெயர் பெற்ற ஒரு பிரபலமான தாவரமாகும். இது பொதுவாக மண்ணை விரும்பினாலும், சரியான கவனிப்பு மற்றும் கவனத்துடன் தண்ணீரில் வளர்க்கலாம். அப்போது தண்ணீரில் சிறிதளவு உரங்களைச் சேர்ப்பது செடிகளைச் செழிக்க உதவுகிறது.
துளசி
துளசியைத் தண்ணீரில் வளர்க்கும் போது, அது பூக்கும் முன் துண்டுகளை எடுத்து, போதுமான வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் வைக்க வேண்டும். அது ஒரு சில மாதங்களில் நன்கு தளர்ந்து , பயன்படுத்தவும் உதவுகிறது.
கற்பூரவள்ளி
மனதுக்கு உற்சாகமளிக்கும் பிரத்யேக வாசனை கொண்டது கற்பூரவல்லி மூலிகை. இதனை வளர்ப்பதற்கு சிறிய தொட்டி போதும். கற்பூரவல்லி வளர்க்க கிள்ளக் கிள்ள இலைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.