ஏழைகளுக்காக களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் பயன்படுத்தப்பட்ட துணிகள், கல்வி உபகரணங்கள், சானிடரி நாப்கின்கள் போன்றவை கூஞ்ச் என்ற தன்னார்வ அமைப்புக்கு வாகனம் மூலம் அனுப்பப்பட்டது. இந்த வாகனத்தை வாகனத்தை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் ஸ்வாதி ரோகித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப் பணித்திட்டத்தின் மூலம் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்  இணைந்து 22 நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பயன்படுத்தாத பொருட்களை சேகரித்து வந்தனர். 106 பெட்டிகளில்  சேகரிக்கப்பட்ட இப்பொருட்கள் அனைத்தும் கூஞ்ச் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம்  ஏழை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

இதுகுறித்து முதன்மை செயல் அலுவலர் ஸ்வாதி ரோகித் கூறுகையில்,  ” நாட்டில் யாரும் உடை இல்லாமல் சிரமப்படக் கூடாது. இதற்காக கூஞ்ச் தன்னார்வ அமைப்பு  20 வருடத்திற்கு மேலாக செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் பழைய உடைகளை மறு சுழற்சி முறையில் உபயோகிக்கத்தக்க உடைகளாக மாற்றி தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மாற்றும் பேராசிரியர்கள் இதற்காக தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். தொடர்ந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்வோம்.” என்றார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மக்கள் தொடர்பு மேலாளரும் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான பிரகதீஷ்வரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.