எஸ்.என்.எம்.வி கல்லூரியில்   புதிய தொழில்முனைவோர் அறிமுக விழா!  

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இன்ஸ்டியூசன் இன்னோவேஷன் செல் சார்பாக  புதிய தொழில்முனைவோர் அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாணவர்கள் புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை முன்னாள் மாணவி நந்தினி “மிஸ்.சாட் குயின்” (Miss.Chat Queen) மற்றும் முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் இரண்டாம் ஆண்டு மாணவன் கோகுல் நாத்  “கேக் க்ளாக்” (Cake Clock) என்ற இரு சிற்றுண்டிகளைத் தொடங்கினர்.

இதையடுத்து, கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, பேசுகையில் போட்டிகள் நிறைந்த சமுதாயத்தில்,  மாணவர்கள் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, அனைவரும் இவர்களைப் போன்று தொழில்முனைவோர்களாகச்  செயல்பட வேண்டும்., எனக் கூறினார்.

சுமார் 3000 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினை, ஐ.சி.சி. ஒருங்கிணைப்பாளர் செல்வஜெயந்தி ஏற்பாடு செய்துள்ளார்.