குவாண்டம் ஏ.எம்.சி யின் புதிய சலுகை

குவாண்டம் ஏ.எம்.சி (Quantum AMC) குவாண்டம் ஸ்மால் கேப் ஃபண்டுடன், நியூ ஃபண்ட் ஆஃபரை (NFO) அறிமுகப்படுத்தியது. இதன் சந்தா அக்டோபர் 16 யில் தொடங்கி அக்டோபர் 27 வரை நடக்கிறது. இதனை தலைமை முதலீட்டு அதிகாரி சிராக் மேத்தா மற்றும் அபிலாஷா சதாலே ஆகியோர் நிர்வகிக்கின்றனர்.

நிதி அறிமுகம் குறித்து குவாண்டம் ஏ.எம்.சியின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் நிதி மேலாளர் சிராக் மேத்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,  “ நீண்ட காலத்திற்கு, ஸ்மால் கேப் ஸ்டாக்குகள் நல்ல வருமானத்தை அளிக்கும் சாத்தியக்கூறை வெளிப்படுத்தியிருப்பதை நாம் கண்டுள்ளோம்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்வதற்காக, வளர்ச்சி வாய்ப்புகளுடன் குறைவாக அறியப்பட்ட, ஸ்மால் பிசினஸ்களில் முதலீடுகளைச் செய்வோம். ஒரு குறிப்பிட்ட காலமாக, இந்தக் கம்பெனிகள் அவற்றின் வருவாய் மற்றும் வருமானங்களை அதிகரிக்கின்றன, இந்த அதிகரிப்பு எங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதிசெய்யலாம்.” என்றார்.

இதுகுறித்து  உரிமையாளர்  மற்றும் குழுமத் தலைவர் சுப்ரமணியம் கூறுயதாவது: மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் உருவாகியுள்ள பல புதிய ஸ்டார்ட்-அப்கள் இறுதியில் ஸ்மால்-கேப் கம்பெனிகளாகப் பட்டியலிடலாம், பின்னர் இறுதியில் மிட்-கேப் அல்லது லார்ஜ்-கேப் இடத்தில் கணிசமான கம்பெனிகளாக வளரும் என்றார்.