மின் கட்டண உயர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 16-ம் தேதி, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, ” கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பில் உள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதோடு  மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

முதலமைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சனைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். எனவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதில் தமிழகம் முழுவதுமுள்ள தொழில்துறையினர் கலந்து கொள்கிறார்கள்” என்றார்.