கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த கல்விச் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வழங்கினார்.
2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான தேர்வுகளில் இளங்கலை பிசியோதெரபி பிரிவில் தர்ஷினி என்ற மாணவியும் முதுகலைப் பிசியோதெரபி பிரிவில் யாழினி என்ற மாணவியும் சிறப்பாக செயல்பட்டு பல்கலைக்கழக அளவில் சாதித்துள்ளனர். இம்மாணவிகளுக்கு இதில் கே.எம்.சி.ஹெச்பிசியோதெரபி கல்லுாரி நிர்வாகம், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.