கோவையில் பிடிபட்டது வெள்ளை நிற நாகபாம்பு… 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் அரிய வகை நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியில் வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கிருப்பதைப் பார்த்துள்ளார். பின்னர் உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்துள்ளார் . மோகன் அந்த பாம்பைப் பார்க்கும் போது  தான் அந்த பாம்பானது வனப்பகுதியில் உலா வரும் அரிதான வெள்ளை நாகம் என்பது தெரியவந்தது.

பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைபாட்டால் இந்தப் பாம்பானது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கப்படும்.  பின்னர் அந்த இரண்டடி நீளம் கொண்ட பாம்பு, பிடிக்கப்பட்டு பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டது. தற்போது மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது.