ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

 

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியுடன், ஈசிலிங்க் அகாடமி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இந்த  ஒப்பந்தமானது, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி,  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி சார் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளும் வகையில் அமைகிறது.,  எனக் கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்தார்.

இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி மற்றும்  ஈசிலிங்க் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சோனி அக்கரா ஆகியோர் கலந்து கொண்டனர்.