– கல்லூரி முதல்வர் கீதா
கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர் குழுவின் சார்பில் அரோஹனா’23 நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சமூகத்தில் வலுவான பல ஆளுமைகளை உருவாக்கும் திறன் கொண்டவர்களாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள். அறத்துடன் நன்மதிப்பை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் வழியாகச் சமூகத்தில் நல்ல சான்றோர்கள் உருவாகிச் சமூகம் வளர்ச்சியடைகிறது என ஆசிரியத்துறையின் சிறப்பினை எடுத்துரைத்தார்.
அதன்பின், மாணவர் குழுவின் சார்பில் ஆசிரியர்களுக்குப் பலவித விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அன்பை பகிரும் விதமாக பரிசுகளை வழங்கினர். இதில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.