கார்ஸ்24: பயன்படுத்திய கார்களுக்கான சிறந்த இடம்

இந்தியாவில் முன்னணி ஆட்டோடெக் நிறுவனமான கார்ஸ்24, ஸ்மார்ட்டான முறையில் வாகனத்தை சொந்தமாக வாங்கும் செயல்முறையை ஊக்குவிப்பதில் முதன்மை வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முன்பே பயன்படுத்திய (பழைய) கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.

2023 – ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பயன்படுத்திய கார்களுக்கான விற்பனை 80 விழுக்காடு அதிகரித்து இருப்பது இதை வலுவாக சுட்டிக் காட்டுகிறது. பழைய கார்களை வாங்குவதற்கு இம்மாநிலத்தில் கார் ஆர்வலர்களது நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்ற கார்ஸ்24, புத்தாக்க நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களது திருப்தி மற்றும் சந்தையில் ஆதிக்கம் ஆகிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இத்துறையில் தர அளவுகோல்களை நிர்ணயித்து முதலிடம் வகிக்கிறது.

மாநிலத்தின் ஆட்டோமொபைல் தலைநகரான கோவையில், பயன்படுத்திய கார் விற்பனை 7 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு வெளிப்படையான மற்றும் திறமையான கொள்முதல் செயல்முறை காரணமாக இருக்கலாம், இது அறிவார்ந்த கார் உரிமையின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.

செப்டம்பர் 2017 இல் தமிழ்நாட்டில் அதன் விரிவாக்கம் முதல், கார்ஸ்24 அதன் தடத்தை வேகமாக விரிவுபடுத்தியுள்ளது, இப்போது மாநிலம் முழுவதும் உள்ள பன்னிரண்டு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்த விரிவான அணுகல், கார் ஆர்வலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இருவருக்கும் செல்ல வேண்டிய இடமாக கார்ஸ்24 ஐ உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது, இது முன் சொந்தமான வாகன பரிவர்த்தனைகளின் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கார்ஸ்24யின் இணை நிறுவனர் கஜேந்திர ஜாங்கிட் கூறுகையில்,”பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தமிழகத்தில் மாறிவரும் ஆட்டோமொபைல் நிலப்பரப்பின் நேர்மறையான குறிகாட்டியாகும்” என்றார்.

கார் விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கார்ஸ்24: 2023 முதல் அரையாண்டில் தமிழ்நாட்டு மக்கள் ரூ 222 கோடி மதிப்புள்ள கார்களை விற்பனை செய்திருக்கின்றனர்
2023 முதல் அரையாண்டில், இம்மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ரூ 222 கோடி மதிப்புள்ள கார்களை விற்பனை செய்து தமிழ்நாடு கார் சந்தையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதை கார்ஸ்24 – ன் தரவு வெளிப்படுத்துகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்கு தங்களது கார்களை மாற்றி வேறு கார்களை வாங்கும் தற்போதைய போக்கு, இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. மாறிவரும் விருப்பங்கள், நவீன அம்சங்கள் கொண்ட புதிய மாடல் கார்களை வாங்கும் விருப்பம் அல்லது கவர்ச்சிகரமான நிதிவசதி/கடன் விருப்பத்தேர்வுகள் கிடைக்கும் நிலை போன்ற பல காரணிகளினால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடும். இதன் விளைவாக தாங்கள் பயன்படுத்திய கார்களை அதிக நபர்கள் விற்பனை செய்ய முடிவு செய்வதால் வசதி, நம்பிக்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விற்பனை செயல்முறை ஆகியவற்றை வழங்கும் கார்ஸ்24 போன்ற செயல்தளங்களுக்கு துடிப்பான சந்தையை அவர்கள் உருவாக்குகின்றனர்.

ஆட்டோமொபைல் தொழிற்துறையானது வளர்ந்து வரும் புதிய போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களை வரவேற்று செயல்படுத்துகின்ற நிலையில், இந்தியாவில் 150 – க்கும் அதிகமான நகரங்களில் வலுவான செயல்பாட்டை கொண்டிருக்கும் கார்ஸ்24, கார் விற்பனை மற்றும் கார் வாங்கும் செயல்முறையின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பு செய்வதில் மிக முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி, கடலூர், ஓசூர், திருநெல்வேலி, பாண்டிச்சேரி மற்றும் திருப்பூர் உட்பட 12 நகரங்களில் இயங்கி வரும் கார்ஸ்24, பயன்படுத்திய கார்கள் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.