பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

ஆடி அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் மக்கள் திரளாக வந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு சிறந்த நாள் ஆகும்.அதிலும் ஆடி அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

 

ஆடி அமாவசை இறந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். பின்பு திரும்பவும் தை அமாவாசையில் பித்ருலோகத்துக்கு சென்று விடுவார்கள். அதனால் அவர்களுக்கு ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.