கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023

கோவை கொடிசியாவில்  கிரடாய் அமைப்பின் சார்பில்  ஃபேர்புரோ 2023 வீடு, வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை துவங்கியது, இது ஆகஸ்ட் 11 – 13 வரை நடைபெறுகின்றன. முதல் முறையாக ஃபேர்புரோ ஏராளமான சலுகைகளை தருகின்றது. அனைத்து முன்னணி கட்டுமானத்தினரையும் ஒருங்கிணைத்து, சிறப்பான சலுகைகளுடன் வீடு வாங்கும் விற்பனையை கிரடாய் நடத்துகிறது. இந்த சலுகை விற்பனை 3 நாட்களுக்கு மட்டுமே.

ஃபேர்புரோ கண்காட்சியில், வீடுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் மனை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கிரடாய் உறுப்பினர்கள் மற்றும் முன்னனி வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளனர்.

வீடு மற்றும் வீட்டுமனை வாங்க விருப்பம் உள்ள உங்கள் நண்பரை ஃபேர்புரோவில் அறிமுகம் செய்து  போனஸ் பெறுங்கள். நீங்கள் உங்கள் நண்பருக்கு கனவு  இல்லத்தை வாங்க ஃபேர்புரோ அறிமுகம் செய்தால், கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களில் ஒவ்வொரு வெற்றிகரமான அறிமுகத்திற்கும் ரொக்க பரிசாக சுமார் 25,000  ரூபாயை ஊக்கத்தொகையாக பெறலாம்.

நண்பர் அறிமுக திட்டத்தை எளிமையாக்கும் விதமாக இது டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடுகளை பதிவு செய்து,  வாட்ஸ் ஆப் போன்றவற்றில் தொடரலாம்.இந்த வீடு வாங்கும் திருவிழாவிற்கு பாரத் ஸ்டேட் வங்கி கண்காட்சிக்கான டைட்டில் ஸ்போன்சராக ஆதரவை தெரிவித்தனர். மேலும் கோல்டன் ஸ்பான்சராக கனரா வங்கி தனது ஆதரவை வழங்கினார்.

25 முக்கிய டெவலப்பர்கள், பங்கேற்பு, 75-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 6 முன்னணி அரசு மற்றும் தனியார் ஃங்கிகள் பங்கேற்பு, வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட்டுகள் விற்பனை ஆகியவை ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சியின் சிறப்புகள் ஆகும்.

இந்த வீடு விற்பனை திருவிழா, குறைந்த கால அளவு சலுகை வாய்ப்பு. ரியல் எஸ்டேட் மேம்படுத்துவோர், ஏஜென்ட்டுகள், கூடுதல் சலுகைகள் மற்றும் வீடு வாங்க விருப்பம் உள்ளோருக்கு தனித்துவமிக்க சலுகைகள் உள்ளன. மேலும் வீட்டுமனை மீதான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தில் சலுகை, இலவச வசதிகள், எளிதாக பணம் செலுத்தும் திட்டம், சொத்து வாங்குவோருக்கும், குடும்பத்தினருக்கும், தேடுவோருக்கும் இது ஒரு அருமையான தருணம்.

இன்று நடைபெற்ற துவக்க விழாவிற்கு தமிழக வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, முதன்மை செயலாளர் செல்வி. அபூர்வா, தமிழக அரசின் நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநர் கணேசன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் , கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், கிரடாய் தென்னிந்திய மண்டல தேசிய துணைத் தலைவர்  ஸ்ரீதரன், கோவை கிரடாய் தலைவர் குகன் இளங்கோ, ஃபோர்புரொ ஒருங்கிணைப்பாளர் முகமது ஷபி ,செயலாளர் அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.