லலிதா லட்சார்ச்சனை மற்றும் திருவிளக்கு பூஜை

கோவை, பீளமேடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ அம்ருதவர்ஷிணி வேத வித்யா பீடத்தின் சார்பில் லலிதா லட்சார்ச்சனை திருவிளக்கு பூஜை மற்றும் ருத்ர யாகம் நடைபெற்றது.மேற்கண்ட பூஜைகளை ஸ்ரீ அம்ருதவர்ஷிணி வேத வித்யா பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ மாதா வேத வித்யாம்பா மஹா சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இப்பூஜையின் நிறைவிலே குழந்தையில்லா தம்பதியருக்கு வெண்ணெய் பிரசாதமும் சிறப்பு குழந்தைகளுக்கு ஆற்றல் செறிவூட்டப்பட்ட பாலும் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜையின் நிறைவாக அனைவருக்கும் மஹா பிரசாதமும் வழங்கப்பட்டது.