அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரியில் ஸ்தான ஆரோகண உற்சவம்

திருப்பூர், அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் ஸ்தான ஆரோகண உற்சவம் புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராஜு நிர்வாக துணைத் தலைவர் (டெக்னிக்கல் ஜனடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்) விழாவிற்கு தலைமைத் தாங்கி, தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

தலைமை விருந்தினரான ஸ்ரீ ராஜு அவர்களின் பங்கு பற்றி, முதல்வர் வித்யாசங்கர் ஊக்கமூட்டும் உரை அனைவரையும் உற்சாகப்படுத்தியது. முந்தைய ஆண்டு சாதனைகள் குறித்து பன்னிரெண்டாம் வகுப்பைச் சேர்ந்த சக்திவிசாகன்,அக்ஷயா மற்றும் ஆறாம் வகுப்பைச் சேர்ந்த அகிலா உரை நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான, பல்வேறு பதவிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11ஆம் வகுப்பைச் சேர்ந்த நாகவிஷ்வா (தலைமை மாணவன்) மற்றும் ஸ்ரீமுகி (தலைமை மாணவி) நடப்பு கல்வியாண்டுக்கான திட்டங்களைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.