அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வழங்கப்பட்டது.

வால்பாறை துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நேற்று முதல் நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடபுத்தகம், நோட்டுக்கள் வழங்கப்படுகின்றன.வால்பாறை ஒன்றியத்தில், 85 துவக்கபள்ளிகள், 15 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப்பள்ளிகளுக்கு கல்வியாண்டிற்கான பாடபுத்தகம், நோட்டுக்கள் வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வால்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் கூறுகையில், ”கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 1,541 மாணவர்களுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, பள்ளிகளுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது,” என்றார்.