கோவையில் 8-ம் தேதி மின்தடை.. மின்சார வாரியம் அறிவிப்பு.

கோவையில் நாளை மறுநாள் 8-ம் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் வாரந்தோறும் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 8-ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:-

பீளமேடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பகுதிகள்

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம்

கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி)

மீனா எஸ்டேட், உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் 8ம் தேதி அன்று மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இந்த முன் அறிவிப்புக்கு ஏற்றவாறு பொதுமக்கள் தயாராகிக் கொள்ளலாம்.