அவினாசிலிங்கம் பல்கலையில் தாய்மொழி தின விழா

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “சர்வதேச தாய்மொழி தின விழா” கொண்டாடப்பட்டது.

பல்வேறு மொழிகளில் இருந்து மாணவிகள் தங்களின் தாய்மொழியில் கலாச்சாரம், உணவு மற்றும் மரபுகளை பற்றி உரையாற்றினர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில ஒருகிணைப்பாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் குழந்தைவேல் “தாய்மொழியின் தனித்துவம்” சொற்பொழிவு ஆற்றினார்.