வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ‘புக்ஸ் ஆன் வீல்’

கோவை மாநகர காவல்துறை மற்றும் கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரி தனது சிஎஸ்ஆர் நிதி மூலம் பொதுமக்களிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் வகையில் ‘புக்ஸ் ஆன் வீல்’ என்ற தலைப்பில் ஆட்டோ நூலகம் என்ற நிகழ்ச்சியை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடத்தியது.

இதில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆட்டோகளுக்கு புத்தகங்களையும், அதற்கு உண்டான கருவிகளையும் வழங்கினார்.